- நாகர்கோவில்
- கன்னியாகுமரி வருவாய் மாவட்டம்
- போட்டி
- நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளி
- நாகர்கோவில் பாய்ஸ் மற்றும்
- தின மலர்
நாகர்கோவில் : கன்னியாகுமரி வருவாய் மாவட்ட ஹாக்கி போட்டிகள் நாகர்கோவிலில் நேற்று தொடங்கியது. நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கும், நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்குமான போட்டிகள் நேற்று காலை ெதாடங்கியது. 14, 17, 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று 3 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் 12 குறுவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மொத்தம் 36 மாணவர்கள் அணியினரும், 36 மாணவிகள் அணியினரும் பங்கேற்கின்றனர். முன்னதாக நேற்று காலை 8 மணிக்கு போட்டிகளை நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் தயாபதி நளதம் தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், போட்டியை நடத்தும் நாகர்கோவில் புனித ஜோசப் மேல்நிலை பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஜான் சேவியர், உடற்கல்வி ஆசிரியர்கள் விமல், பிரேம்தாஸ், காட்வின் ஜோயல் உள்பட நடுவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் அணியினர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்….
The post நாகர்கோவிலில் மாணவ, மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி தொடக்கம்-72 அணிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.